Enjoy Your Healthy
Delicious Food
We are team of talented designers making websites with Bootstrap

நிகழ்வுகள்
உலகத் தமிழர் கிராமியக் கலைஞர்கள் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா, திருப்பத்தூர் கிழக்கு மாவட்டம

உலகத் தமிழர் கிராமியக் கலைஞர்கள் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா, திருப்பத்தூர் கிழக்கு மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாடு என்ற மலைகிராமத்தில் நடைபெற்றது.
நமது சங்கத்தின் கௌரவத் தலைவர் டாக்டர் தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிளை திறப்பு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழாவில் சங்கத்தின் தலைவர் துரிஞ்சை த.இரமேஷ், ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜவேலு, மாநிலத் துணைத்தலைவர் திரு. தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், திருவண்ணாமலை சன் ஆர்ட்ஸ் கல்லூரியின் தமிழ் துறை தலைவருமான பேராசிரியர் டாக்டர் ச.செந்தில்வேலன் அவர்களின் கிராமிய பாடல்கள் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
கிளை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு.ராஜேஷ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.
இதுபோன்று உங்கள் மாவட்டத்திலும் கிளைகள் திறக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்
நன்றி
தொடர்பு கொள்ள:
9884869377
9841838153
7397369192



















